வால்பாறை பிர்லா அருவியில் புகைப்படம் எடுத்த போது தவறி விழுந்து சுற்றுலா பயணி மாயம்!

வால்பாறைக்கு சுற்றுலா வந்த கோவையை சேர்ந்த ஜாகர் (21) பிர்லா அருவியில் புகைப்படம் எடுக்கும் போது தவறி விழுந்து நீரில் மூழ்கிய மாயமான நிலையில், தகவலின் பேரில் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினர் மாயமான இளைஞரை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: வால்பாறைக்கு சுற்றுலா வந்த இளைஞர் ஒருவர் பிர்லா அருவியில் புகைப்படம் எடுத்த போது நீரில் மூழ்கி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜாஜூ என்பவரது மகன் ஜாகர் (21). இவர் தனது பெண் தோழியுடன் வால்பாறைக்கு நேற்று சுற்றுலா வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வால்பாறை பகுதியில் சுற்றி பார்த்துவிட்டு இன்று காலை வால்பாறை அருகே சோலையாறு எஸ்டேட் பகுதியில் உள்ள பிர்லா பால்ஸ் அருவிக்கு சென்றுள்ளனர்.

அங்கு அருவி அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்றபோது கால் தவறி ஜாகர் தண்ணிருக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது தோழியும் தண்ணிரில் குதித்துள்ளார். ஜாகர் நீரில் மூழ்கிய நிலையில், அந்த பெண் தண்ணிரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

தண்ணிரில் மூழ்கிய நண்பரை அருகில் உள்ளவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயன்றுள்ளார்.



இதனையடுத்து தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நீரில் மூழ்கியவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



புகைப்படம் எடுக்க சென்று நீரில் மூழ்கி வாலிபர் மாயமான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...