பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றதற்கு பின் உள்ள மர்மம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என தம்பிதுரை பேட்டி

ஜெயலலிதாவின் உடல் அடக்கத்திற்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றதற்கு பின் உள்ள மர்மம் குறித்து அவர் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியதாவது:-

நீட் தேர்வு மற்றும் நெடுவாசல் பிரச்சனைகள் மாநில அரசின் பிரச்சனைகள் எனவும் இதில் தாம் கருத்து கூற எதுவுமில்லை எனவும் கூறிய தம்பிதுரை, நீட் தேர்வினை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி வருகின்றது எனவும் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நட்புறவுடன் செயல்படுகிறது எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

அண்ணா இறந்த போது அவரது உடல் அடக்கம் செய்த பின்னரே காபந்து முதலமைச்சராக நெடுஞ்செழியன் பொறுப்பேற்றார் எனவும், ஆனால் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யும் முன்பாக பன்னீர்செல்வம் எதற்காக முதலமைச்சர் பதவி ஏற்றார் என அவர் விளக்கவேண்டும் எனவும் தம்பிதுரை தெரிவித்தார்.

அ.தி.மு.க.வில் அணிகள் எதுவும் இல்லை என கூறிய அவர், பொதுச் செயலாளராக சசிகலா நீடித்து வருவதாகவும் தெரிவித்தார். 

சசிகலாவிற்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள நோட்டிஸிற்கு டிடிவி தினகரன் பதிலளித்துள்ளது சரியான நடைமுறை தான் எனவும், பொதுக்குழுவில் அனைவரும் கையெழுத்திட்டு சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை எதிர்ப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டது இயற்கை மரணம் தான் எனக்கூறிய தம்பிதுரை இதில் மர்மம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...