இணையதள மோசடியில் சிக்கி ஏமாறும் ஐ.டி. ஊழியர்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவை கணபதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான புவனேஸ்வரி (32) என்பவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடிய போது, மோசடி கும்பல் ஒன்று முதலீட்டு ஆசைகாட்டி, ரூ.8.97 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ள நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் அதிகளவில் ஏமாறுவது ஐடி ஊழியர்கள் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பகுதி நேர பணி, இணையதளம் மூலம் முதலீடு செய்யலாம் என எண்ணும் பட்டதாரி இளைஞர்களை குறி வைத்து வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் மூலமாக லிங்குகளை அனுப்பும் மோசடி கும்பல் ஆசை வார்த்தை காட்டி பணத்தை பறித்து வருகின்றனர். 

இதில் நன்கு படித்த பட்டதாரி இளைஞர்களே அதிகளவு பாதிக்கப்பட்ட வருகின்றனர். இந்நிலையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கோவை கணபதியை சேர்ந்த புவனேஸ்வரி (32) என்பவர், பகுதி நேர வேலைக்காக புவனேஸ்வரி இணையதளத்தில் தேடியபோது அவரை டெலிகிராம் குழுவில் மர்ம நபர்கள் இணைத்துள்ளனர். 

மேலும் அக்குழுவில் ரூ.2,000 முதலீடு செய்தால் அதற்கான உரிய லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பி புவனேஸ்வரி கடந்த மே 19ஆம் தேதி ரூ.2,000 முதலீடு செய்துள்ளார். அதில் அவருக்கு ரூ.2,800 கிடைத்துள்ளது. அதனை உண்மை என நம்பிய அவர் மேலும் முதலீடு செய்ய முயல்வதை கண்டறிந்த, மோசடி கும்பல் அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர். 

இதனை நம்பி பல தவணைகளாக ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என தொடர்ந்து புவனேஸ்வரி முதலீடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது, அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பணத்தை கட்டினால் மட்டுமே கணக்கு திறக்கப்படும் என தெரிவித்தனர். 

இதனையும் நம்பி மீண்டும் புவனேஸ்வரி பணத்தை செலுத்தி உள்ளார். கிட்டத்தட்ட ரூ.8.97 லட்சம் கட்டிய நிலையிலும் அவர் முதலீடு செய்த பணம் திரும்ப வராததால் சந்தேகமடைந்தவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...