இணையதள மோசடியில் சிக்கி ஏமாறும் ஐ.டி. ஊழியர்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்!

கோவை கணபதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியரான புவனேஸ்வரி (32) என்பவர் ஆன்லைனில் பகுதி நேர வேலை தேடிய போது, மோசடி கும்பல் ஒன்று முதலீட்டு ஆசைகாட்டி, ரூ.8.97 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ள நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: ஆன்லைன் மோசடி கும்பலிடம் அதிகளவில் ஏமாறுவது ஐடி ஊழியர்கள் தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பகுதி நேர பணி, இணையதளம் மூலம் முதலீடு செய்யலாம் என எண்ணும் பட்டதாரி இளைஞர்களை குறி வைத்து வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் மூலமாக லிங்குகளை அனுப்பும் மோசடி கும்பல் ஆசை வார்த்தை காட்டி பணத்தை பறித்து வருகின்றனர். 

இதில் நன்கு படித்த பட்டதாரி இளைஞர்களே அதிகளவு பாதிக்கப்பட்ட வருகின்றனர். இந்நிலையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கோவை கணபதியை சேர்ந்த புவனேஸ்வரி (32) என்பவர், பகுதி நேர வேலைக்காக புவனேஸ்வரி இணையதளத்தில் தேடியபோது அவரை டெலிகிராம் குழுவில் மர்ம நபர்கள் இணைத்துள்ளனர். 

மேலும் அக்குழுவில் ரூ.2,000 முதலீடு செய்தால் அதற்கான உரிய லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதை நம்பி புவனேஸ்வரி கடந்த மே 19ஆம் தேதி ரூ.2,000 முதலீடு செய்துள்ளார். அதில் அவருக்கு ரூ.2,800 கிடைத்துள்ளது. அதனை உண்மை என நம்பிய அவர் மேலும் முதலீடு செய்ய முயல்வதை கண்டறிந்த, மோசடி கும்பல் அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்கலாம் என தெரிவித்துள்ளனர். 

இதனை நம்பி பல தவணைகளாக ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என தொடர்ந்து புவனேஸ்வரி முதலீடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் தான் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது, அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பணத்தை கட்டினால் மட்டுமே கணக்கு திறக்கப்படும் என தெரிவித்தனர். 

இதனையும் நம்பி மீண்டும் புவனேஸ்வரி பணத்தை செலுத்தி உள்ளார். கிட்டத்தட்ட ரூ.8.97 லட்சம் கட்டிய நிலையிலும் அவர் முதலீடு செய்த பணம் திரும்ப வராததால் சந்தேகமடைந்தவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...