கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், காவல்துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையத்தை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

கோவை துடியலூர் காவல் எல்லையில் இருந்து பிரித்து கவுண்டம்பாளையத்தில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கவுண்டம்பாளையம் மேம்பாலம் அருகே காவல் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வந்தது.

இந்த காவல் நிலையத்திற்கு ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 27 போலீசார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று இந்த புதிய காவல் நிலையத்தை தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றி வைத்தும் தொடங்கி வைத்தார். 



தொடர்ந்து அங்குள்ள காவல் துறையினரிடம் இந்த பகுதியை முழுவதுமாக ஆய்வு செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை வராமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். 



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரேந்திரகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் குமார், காவல்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...