கோவையில் தனியார் கல்லூரி பேராசிரியையிடம் நகையை பறிக்க முயற்சி - இளைஞர் கைது!

வெள்ளலூர் அருகே என்.ஜி ஆர் சாலையில் சென்ற தனியார் கல்லூரி பேராசிரியரான ஜெயகௌரி (44) என்பவரது கழுத்தில் இருந்த நகையை இளைஞர் ஒருவர் பறிக்க முயன்ற நிலையில், அந்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் பேராசிரியர் ஜெயகௌரியே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: வெள்ளலூர் அருகே கல்லூரி பேராசிரியரிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை வெள்ளலூர் என்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு என்பவரது மனைவி ஜெயகௌரி (44). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் புதன்கிழமை மாலை பணி முடிந்து வந்த ஜெயகௌரி என்.ஜி ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் வந்த இளைஞர் ஒருவர் திடீரென ஜெயகௌரி கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றார்.

சுதாரித்துக் கொண்ட ஜெயகௌரி அந்த இளைஞரை மடக்கி பிடித்தார். இதை அடுத்து அங்கிருந்தவர்களும் கூடி இளைஞரை பிடித்து, போத்தனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

விரைந்து வந்த போலீசார் இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் பிடிபட்ட நபர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த சிவக்குமார் மகன் அருண்குமார் (25) என்பது தெரியவந்தது.

மேலும், கோவை வெள்ளலூர் பகுதியில் தங்கி கால் டாக்ஸி ஓட்டுனராக வேலை செய்து வந்த இவர், பணத்திற்காக பேராசிரியை ஜெயகௌரியின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...