கோவையில் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, முகாம் அலுவலகத்தில் உள்ள பொருட்களை தனியார் டிராவல்ஸ் மூலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார். கோவை நீலாம்பூர் - மதுக்கரை நெடுஞ்சாலையில் சென்ற போது, லாரி ஓட்டுநரை மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துகிருஷ்ணன் (வயது30). சென்னையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஈச்சர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, சமீபத்தில் சென்னைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஈரோட்டில் உள்ள ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்து அவரது பொருட்கள் தனியார் டிராவல்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சனிக்கிழமை அனுப்பியுள்ளார்.

பொருட்களை ஏற்றிக்கொண்டு முத்துகிருஷ்ணன் சேலம் - கொச்சின் சாலையில் கிளம்பியுள்ளார். அப்போது, சனிக்கிழமை நள்ளிரவு கோவை நீலாம்பூர் - மதுக்கரை நெடுஞ்சாலையில், கஞ்சிக்கோணாப்பாளையம் பிரிவு அருகே வந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், ஈச்சர் லாரியின் பின் சக்கரம் டயர் பஞ்சர் ஆகியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய ஓட்டுநர் முத்துகிருஷ்ணன், கீழே இறங்கி பார்க்கச் சென்றபோது, மர்ம நபர்கள் மூன்று பேரும் முத்துகிருஷண்னை பிடித்து கையை கயிறால் கட்டிவிட்டு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் லாரியின் பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, அங்கு வந்த சக வாகன ஓட்டிகள் உதவியுடன் கயிறுகளை கழற்றிய முத்துகிருஷ்ணன், போலீஸ் அவசர எண் 100 க்கு அழைத்து தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போத்தனூர் குற்றப்பலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...