கோவையில் லாரி ஓட்டுநரை மிரட்டி பணம் பறிப்பு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, முகாம் அலுவலகத்தில் உள்ள பொருட்களை தனியார் டிராவல்ஸ் மூலம் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார். கோவை நீலாம்பூர் - மதுக்கரை நெடுஞ்சாலையில் சென்ற போது, லாரி ஓட்டுநரை மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: சென்னை பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முத்துகிருஷ்ணன் (வயது30). சென்னையில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஈச்சர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கிருஷ்ணன் உன்னி, சமீபத்தில் சென்னைக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஈரோட்டில் உள்ள ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்து அவரது பொருட்கள் தனியார் டிராவல்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு சனிக்கிழமை அனுப்பியுள்ளார்.

பொருட்களை ஏற்றிக்கொண்டு முத்துகிருஷ்ணன் சேலம் - கொச்சின் சாலையில் கிளம்பியுள்ளார். அப்போது, சனிக்கிழமை நள்ளிரவு கோவை நீலாம்பூர் - மதுக்கரை நெடுஞ்சாலையில், கஞ்சிக்கோணாப்பாளையம் பிரிவு அருகே வந்த போது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், ஈச்சர் லாரியின் பின் சக்கரம் டயர் பஞ்சர் ஆகியுள்ளதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய ஓட்டுநர் முத்துகிருஷ்ணன், கீழே இறங்கி பார்க்கச் சென்றபோது, மர்ம நபர்கள் மூன்று பேரும் முத்துகிருஷண்னை பிடித்து கையை கயிறால் கட்டிவிட்டு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின்னர் அவர்கள் லாரியின் பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, அங்கு வந்த சக வாகன ஓட்டிகள் உதவியுடன் கயிறுகளை கழற்றிய முத்துகிருஷ்ணன், போலீஸ் அவசர எண் 100 க்கு அழைத்து தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போத்தனூர் குற்றப்பலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடிவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...