கோவை மத்திய சிறையில் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு பாராட்டு விழா!

கோவை மத்திய சிறையில் அரசு பொதுத் தேர்வில் 10ஆம் வகுப்பில் 2 பெண்கள் உட்பட 47 சிறைவாசிகளும் மற்றும் 12ஆம் வகுப்பில் 12 சிறைவாசிகளும் பொதுத் தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களுக்கு இன்று சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.


கோவை: கோவை மத்திய சிறையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

கோவை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மற்றும் தடுப்பு காவல் என சுமார் 2,300க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பொருட்டு கல்வி, யோகா, தியானம், தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு வகையான மறுவாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த மாதம் நடைபெற்ற அரசு பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் இரண்டு பெண் உட்பட 47 சிறைவாசிகளும் மற்றும் 12ஆம் வகுப்பில் 12 சிறைவாசிகளும் பொதுத் தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக கோவை சரக சிறை துறை துணை தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் சிறைக் கண்காணிப்பாளர் ஊர்மிளா, தலைமையில், தேர்ச்சி பெற்ற சிறைவாசிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.



தொடர்ந்து இன்னர் வீல் கிளப் சார்பாக சிறை மருத்துவமனைக்கு வீல் சேர் ஒன்றும், ஸ்டீல் கட்டில் ஒன்றும் சிறை நூலகத்திற்கு 45 புத்தகங்களும் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இவ்விழாவின் போது செந்தமிழ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கனகசுப்ரமணியம் மற்றும் இன்னர் வீல் கிளப் ஆப் கோயம்புத்தூர் (தெற்கு) தலைவி சுதா, கோதை நாயகம், சுமதி, திரிபுரசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...