அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் - எஸ்.பி.வேலுமணி உறுதி!

கோவை அருகே கரடிமடை பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு மதுவிற்பனை நடைபெறுவது குறித்து தட்டிக்கேட்ட அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை: கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டு வரப்படும் என தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை கரடிமடை பகுதியில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



இந்நிலையில் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி, செல்வராஜ் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,



கோவையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறது.

குறிப்பாக கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மதுவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்து கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக்கை நடத்தும் திமுகவை சேர்ந்த ராகுல், கோகுல் ஆகியோர் தாக்கியதில் அவர் பலியாகியுள்ளார்.

இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தி உள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு காவல்துறை ஆதரவாக உள்ளது. கோவையில் கள்ளதனமாக மதுவிற்பனையை தடுக்காத காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும். ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனித்தீர்மானம் கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...