கர்நாடகாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவியேற்பு - கோவையில் காங். கொண்டாட்டம்!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி இன்று ஆட்சி அமைக்கிறது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுள்ளனர். இந்த வெற்றியை கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



கோவை: கர்நாடகாவில், நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.

இதனை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவையும் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரையும் காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சித்தராமையாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து டி.கே.சிவக்குமார் துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, அமைச்சரவையில் முதல் கட்டமாக 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.



காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை கோவையில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



அதன்படி, கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் உள்ள தபால் நிலையம் அருகே கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.



காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில், காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...