வால்பாறையில் 3வது நாள் யானைகள் கணக்கெடுப்பு பணி - வனச்சரகர், வன அலுவலர்கள் பங்கேற்பு!

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வனப்பகுதியில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், 3வது நாளான இன்று கோவை வால்பாறையில் உள்ள நீர்நிலை பகுதிகளில் உள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.


கோவை: யானைகள் குறித்த 3வது நாள் கணக்கெடுக்கும் பணியில் இன்று, வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள யானைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருகினைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் தமிழகத்தில் கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் உட்பட வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் உடுமலை அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்களில் 3 நாட்கள் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

யானைகள் கணக்கெடுக்கும் பணியில் வனச்சரகர் தலைமையில் வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட குழுவுக்கு 4 பேர் வீதம் 34 குழுக்களாக 136 பேர் இப்பணியில் ஈடுபட்டனர்.

முதல் நாள் நேரடியாக யானைகளை பார்ப்பது, 2ம் நாள் நேர்கோட்டு பாதையில் 2 கிமீ தூரம் சென்று கணக்கிடுவது 3வது நாள் நீர்நிலைகள் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் நேரடியாக யானைகளை கண்டு கணக்கிடுவது என்ற அடிப்படையில் யானைகள் கணக்கெடுக்கப்படுகின்றன.



இதில் இன்று மூன்றாவது நாளாக வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனசரகங்களில் நீர் நிலை பகுதியில் யானைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.



இதில் மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் நீரார் அணை பகுதியில் யானைகள் நடமாட்டத்தை யானைகள் உள்ளதை கணக்கெடுத்தனர்.



அதேபோல் வால்பாறை வனச்சகர் வெங்கடேஷ் தலைமையில் அக்கா மலை வனப்பகுதிக்குள் நீர்நிலை அருகில் யானைகள் நடமாட்டம் அறிந்து யானைகளின் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட யானை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...