ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது..! - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கருத்து!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது என்றும் கூறினார்.



கோவை: ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது,



மோடியின் 9 ஆண்டு கால ஆட்சி நிறைவடைந்து 10 வது ஆண்டு துவங்குகிறது. கோவிட் காலத்தில் நெருக்கடி இருந்தாலும் பொருளாதாரத்தில் 5 வது இடத்தில் இந்தியா இருக்கின்றது.

பொருளாதார வளர்ச்சி பாதையில் முதல் இடத்தில் இந்தியா இருக்கிறது. இதற்கு காரணமான மத்திய அரசை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றபட்டு இருக்கிறது. மே 30 முதல் இந்த சாதனைகளை கடைசி வாக்காளரிடம் வரை கொண்டு சேர்ப்போம்.

ஜல்லிகட்டுக்கு யார் யாரோ கிரிட்டிட் எடுத்து கொள்கின்றனர். ஆனால் உண்மையில் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின் போது ஜல்லிகட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. 2017 ஜனவரியில் அரசை நாம் வழிநடத்தி, மாநிலத்தை அவசர தீர்மானம் நிறைவேற்ற சொல்லி, அப்போது முக்கிய அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து ஓரே நாளில் 4 அமைச்சகங்களை பார்த்து அனுமதி கொடுக்கப்பட்டது.

2016 அரசாணைக்கு வாங்கிய தடை இப்போது நீங்கி இருக்கிறது. ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெற காரணமான பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்படுகின்றது. கேரளாவில் இருந்து கழிவுகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றது. கேரளாவிற்கு ஏராளமான கனிம வளங்கள் கடத்தப்படுகின்றது.

தமிழகம் முழுக்க மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. கள்ள சாராயத்தால் 22 பேர் இறந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு காரணமாக மது இருக்கின்றது. மது விலக்கு கொண்டு வர பட வேண்டும். கள்ள சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை கண்டித்து நாளை மகளிரணி போராட்டம் நடத்தப்படும்.

மகளிரணி சார்பில் ஆளுநரை பார்த்து மனு அளிக்கவும் இருக்கின்றனர். நாளைய ஆர்ப்பாட்டம் மகளிரணி சார்பில் நடந்தாலுல் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். ஓவ்வொரு ஆண்டும் மே மாதம் மக்களை சந்தித்து இருக்கின்றோம். அது போலதான் இந்த ஆண்டும் நடத்தப்படுகின்றது.

பக்கத்து வீட்டில் குழந்தை பிறந்தால் நான்தான் காரணம் என சிலர் சொல்லி கொள்கின்றனர், அது போல ஜல்லிகட்டிற்கு நாங்கள்தான் காரணம் என சொல்லி கொள்கின்றனர். மதுவிலக்கு மாநில அளவில் முடிவு செய்யப்பட வேண்டியது. கள்ளச்சாராய மரணம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கள்ளச்சாரயம் கூடாது என்பதற்காக மதுக்கடைகள் கொண்டு வரப்பட்டது. அப்புறம் ஏன் கள்ளச் சாராயம் வருகின்றது?. சாராயத்திற்கு வழிவகை செய்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்.

ஜல்லிக்கட்டின் போது மாநில அரசை வழி நடத்தியது மத்திய அரசுதான். 100 சதவீத கிரிடிட் மத்திய அரசுக்குதான். அப்போது முதல்வராக இருந்தவர் ஒ.பி.எஸ், இதற்கு அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உரிமை கொண்டாடினாலும் தவறில்லை. திமுக தலைவர் ஸ்டாலின் உரிமை கொண்டாட முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...