பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியானது - 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி!

பிளஸ்1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும், 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், அதிகபட்சமாக கணக்கு பதிவியல் பாடத்தில் 995 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று அசத்தியுள்ளனர்.



சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் நடைபெற்றது. இதில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது.

இதனை தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை வெளியான நிலையில், பிற்பகல் 2 மணிக்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் 90.93 சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், 7,549 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tnresults.nic.in/ மற்றும் http://www.dge.tn.gov.in/ ஆகிய அரசு தேர்வுத்துறையின் இணையதளங்களில், மாணவர்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், மாணவர்கள் குறிப்பிட்டிருந்த மொபைல் எண்ணுக்கும், எஸ்எம்எஸ் வாயிலாக மதிப்பெண் விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் ஏராளமான மாணவர்கள் பல்வேறு பாடங்களில் செண்டம் எனப்படும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

அதன்படி, தமிழ் பாடத்தில் 9 பேரும், ஆங்கிலம் பாடத்தில் 13 பேரும், இயற்பியல் பாடத்தில் 440 பேரும், வேதியியல் பாடத்தில் 107 பேரும், உயிரியல் பாடத்தில் 65 பேரும், கணிதம் பாடத்தில் 17 பேரும், தாவரவியல் பாடத்தில் 2 பேரும், விலங்கியல் பாடத்தில் 34 பேரும், கணினி அறிவியல் பாடத்தில் 940 பேரும்,

வணிகவியல் பாடத்தில் 214 பேரும், கணக்கு பதிவியல் பாடத்தில் 995 பேரும், பொருளியல் பாடத்தில் 40 பேரும், கணினி பயன்பாடு பாடத்தில் 598 பேரும், வணிக கணிதம், புள்ளியியல் பாடத்தில் 132 பேரும் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....