கோவை நீலாம்பூர் அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது!

கோவை நீலாம்பூர் அருகே மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதை பொருள் விற்பனை செய்ய முயன்ற கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த வருண் (26), நந்தகிருஷ்ணா (21), மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த முகம்மது அரஷத் (20) ஆகிய மூவரையும் கைது செய்து ரூ.1.80 லட்சம் மதிப்பிலான போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: நீலாம்பூர் அருகே உயர் ரக போதைப்பொருளை கடத்தி வந்த கேரளாவை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் நடைபெற்று வரும் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். இதில் சமீபகாலமாக மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப் பொருளை பெங்களூரிலிருந்து வாங்கி வரும் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கோவையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதனை தடுக்க மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் நேரடி கண்காணிப்பில் தனிப்படை அமைக்கப்பட்டு சந்தேகிக்கும் நபர்கள் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு பெங்களூரிலிருந்து மெத்தபெட்டமைன் உயர் ரக போதைப் பொருளை வாங்கி வந்த சிலரை கண்காணித்து வந்த தனிப்படை போலீசார் நீலாம்பூர் அருகே அவர்கள் வந்த போது மடக்கி பிடித்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் உயர் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த வருண் (26), நந்தகிருஷ்ணா (21), மற்றும் பாலக்காட்டைச் சேர்ந்த முகம்மது அரஷத் (20) என்பதும், இவர்களில் நந்தகிருஷ்ணா, முகமது அரஷத் இருவரும் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இவர்கள் பெங்களூரிலிருந்து போதைப் பொருட்களை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.



இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரூ.1.80 லட்சம் மதிப்பிலான 60 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...