பல்லடம் அருகே வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதம் - அரசு உதவ வேண்டும் என கோரிக்கை

பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட 2 கூலி தொழிலாளிகளின் குடும்பங்கள், தங்க இடமில்லாமல் தவித்து வருவதாகவும் அரசு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே காரணம்பேட்டை பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை அடுத்த எம்ஜிஆர் நகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விசைத்தறி தொழிலாளியான கருப்பசாமி தனது மனைவி தேவி மற்றும் தனது மகனுடன் நான்கு வருடங்களுக்கு முன்பு எம்ஜிஆர் நகரில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை முதலே வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மாலை திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சூறைக்காற்றில் சிக்கி கருப்பசாமி வீட்டின் மேற்கூரை முழுவதுமாக தூக்கி வீசப்பட்டது. இதில் வீட்டின் உள்ளே இருந்த கருப்புசாமியின் மனைவி தேவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் மேற்கூரை சூறைக்காற்றில் சிக்கி தூக்கி எரியப்பட்டதில், மின்விசிறி, தொலைக்காட்சி, மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தது.



வீட்டின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் தங்குவதற்கு இடமின்றி கருப்பசாமியின் குடும்பத்தார் தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதேபோன்று கருப்பசாமியின் வீட்டிற்கு அருகேயுள்ள 2 ஓட்டு வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.



சூறைக்காற்றில் சேதம் அடைந்த குடும்பத்தாருக்கு அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...