தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயம்

கோவை தொண்டாமுத்தூர் தென்னமநல்லூர் அருகேயுள்ள ராசு கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பத்மா(47).அவரை காட்டு யானை தாக்கி படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயமடைந்தார்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை, தென்னநல்லூர் அருகே உள்ள ராசு கவுண்டர் தோட்டத்தில் நின்று அங்கு வீட்டிலிருந்த அரிசி மூட்டை வெளியே சாப்பிட்டது.

சத்தம் கேட்டு, வெளியே பத்மா (47) என்பவர் பார்த்தபோது, திடிரென காட்டு யானை அவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து அங்கிருந்த யானையை வனத்துறை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே நரசிபுரம் வெள்ளிமலை பட்டிணம்வடக்கலூர் பகுதிகளில் மற்றொரு காட்டு யானை வழக்கமான நேரத்தில் வராமல் 8 மணிக்கு உலா வந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் காட்டு யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வடக்கலூர் பகுதியில் காட்டு யானை உலா வந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...