தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயம்

கோவை தொண்டாமுத்தூர் தென்னமநல்லூர் அருகேயுள்ள ராசு கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் பத்மா(47).அவரை காட்டு யானை தாக்கி படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



கோவை: தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி பெண் படுகாயமடைந்தார்.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த ஒற்றை காட்டு யானை, தென்னநல்லூர் அருகே உள்ள ராசு கவுண்டர் தோட்டத்தில் நின்று அங்கு வீட்டிலிருந்த அரிசி மூட்டை வெளியே சாப்பிட்டது.

சத்தம் கேட்டு, வெளியே பத்மா (47) என்பவர் பார்த்தபோது, திடிரென காட்டு யானை அவரை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து அங்கிருந்த யானையை வனத்துறை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே நரசிபுரம் வெள்ளிமலை பட்டிணம்வடக்கலூர் பகுதிகளில் மற்றொரு காட்டு யானை வழக்கமான நேரத்தில் வராமல் 8 மணிக்கு உலா வந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அங்கிருந்த வனத்துறை ஊழியர்கள் காட்டு யானையை பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். வடக்கலூர் பகுதியில் காட்டு யானை உலா வந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...