கோவையில் தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாம் - மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவங்கி வைத்தார்!

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து நடத்திய மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான கண்‌ மருத்துவ சிறப்பு முகாமை மாநகராட்சி ஆணையர் பிரதாப் துவங்கி வைத்தார்.


கோவை: கோவையில் மாநகராட்சி சார்பில் நடைபெறும் கண்‌ மருத்துவ சிறப்பு முகாமினை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ துவக்கி வைத்தார்‌.

கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து கண்‌ மருத்துவ சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பேசியதாவது, கோவை‌ மாநகராட்சி மற்றும்‌ சங்கரா கண்‌ மருத்துவமனை இணைந்து கோவை‌ வடக்கு மண்டல அலுவலக வளாகத்தில்‌ கோவை‌ மாநகராட்சியில்‌ பணிபுரிந்து வரும்‌ தூய்மை பணியாளர்களுக்கு வெளிச்சம்‌ திட்டத்தின் கீழ்‌ கட்டணமில்லா சிறப்பு கண்‌ சிகிச்சை மருத்துவ முகாம்‌ தொடங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில்‌ பணிபுரிந்து வரும்‌ 2,279 நிரந்தர தூய்மை பணியாளா்‌ மற்றும்‌ 4,097 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்‌, 623 டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌, 494 ஓட்டுநர்கள்‌ மற்றும்‌ கிளீனர்கள் என‌ ஆகமொத்தம்‌ 7493 மாநகராட்சி பணியாளா்களுக்கு அவர்களின்‌ உடல்நலத்தை கருத்தில்‌ கொண்டு கட்டணமில்லா சிறப்பு கண்‌ சிகிச்சை மருத்துவ முகாம்‌ இன்று முதல்‌ நடத்தப்படுகிறது.



சங்கரா கண்‌ மருத்துவமனையை சார்ந்த 10 பேர்‌ கொண்ட மருத்துவக்குழு இப்பணியில்‌ ஈடுபட்டு வருகிறார்கள்‌. பார்வை பரிசோதனை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்‌ கண்ணாடியும்‌, அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அறுவை சிகிச்சை, தொடா்‌ சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு தொடா்‌ சிகிச்சையும்‌ இந்த கட்டணமில்லா சிறப்பு கண்‌ முகாமில்‌ வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக இன்று நடத்தப்படும்‌ மருத்துவ முகாமில்‌ 150 முதல்‌ 200 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. வடக்கு மண்டலத்தில்‌ பணியாற்றும்‌ சுமார்‌ 900 நபர்கள்‌ இந்த முகாமில்‌ பயன்பெறுவார்கள்‌. இத்திட்டத்திற்கு வெளிச்சம்‌ என பெயரிடப்பட்டுள்ளது.

அனைவரும்‌ இந்த கண்‌ சிகிச்சை மருத்து முகாமினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌. மாநகராட்சி முழுவதும்‌ உள்ள 100 வார்டுகளிலும்‌ வெளிச்சம்‌ திட்டம்‌ படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.‌ இதன் மூலம் சுமார்‌ 8,000 நபர்கள்‌ பயன்பெறுவார்கள்‌.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...