கோவையில் பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட வழக்கு - கைதான இருவரும் தப்பிக்க முயன்ற போது விழுந்து கை உடைந்தது!

கோவை ஜி.வி.ரெசிடென்சி அருகே நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம், காரில் வந்து செயினை பறிக்க முயன்ற வழக்கில் கைதான இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது தடுக்கி விழுந்ததில் கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்று கைதான இருவர், போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது, தடுக்கி விழுந்து கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பீளமேடு ஹட்கோ காலணியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண், ஜி.வி.ரெசிடென்சி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது, காரில் வந்த நபர்கள் அவரது கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதில், அவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் 24 மணி நேரத்தில் அபிஷேக் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை போலீசார் பிடித்த போது இருவரும் தப்ப முயன்றனர், அப்போது விழுந்ததில் அபிஷேக் குமாருக்கு வலது கையிலும், சக்திவேலுக்கு இடது கையிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...