கோவையில் பெண்ணிடம் நகைபறிப்பில் ஈடுபட்ட வழக்கு - கைதான இருவரும் தப்பிக்க முயன்ற போது விழுந்து கை உடைந்தது!

கோவை ஜி.வி.ரெசிடென்சி அருகே நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம், காரில் வந்து செயினை பறிக்க முயன்ற வழக்கில் கைதான இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது தடுக்கி விழுந்ததில் கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்று கைதான இருவர், போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற போது, தடுக்கி விழுந்து கை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை பீளமேடு ஹட்கோ காலணியை சேர்ந்த கவுசல்யா என்ற பெண், ஜி.வி.ரெசிடென்சி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது, காரில் வந்த நபர்கள் அவரது கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றதில், அவர் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் 24 மணி நேரத்தில் அபிஷேக் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை போலீசார் பிடித்த போது இருவரும் தப்ப முயன்றனர், அப்போது விழுந்ததில் அபிஷேக் குமாருக்கு வலது கையிலும், சக்திவேலுக்கு இடது கையிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

தற்போது இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...