திருப்பூரில் காவல்துறைக்கு புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் - மாவட்ட எஸ்.பி சசாங் சாய் துவங்கி வைத்தார்!

திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக புதிதாக இருசக்கர வாகனங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.பி சசாங் சாய் கலந்து கொண்டு இருசக்கர வாகனங்களை பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூரில் காவல்துறையினருக்கான புதிய இருசக்கர ரோந்து வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் காவல்துறையினருக்கு புதிய ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விரைவாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் செல்லும் வகையில் இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளான அவிநாசி, ஊத்துக்குளி, ஊதியூர் உள்ளிட்ட 12 காவல் நிலையங்களுக்கான புதிய இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இந்த புதிய ரோந்து இருசக்கர வாகனங்களில் அதிக ஒளி எழுப்பக்கூடிய நவீன இயந்திரங்கள் மற்றும் ஸ்பீக்கர், மைக் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...