கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே பைக் திருட்டு - இருவர் கைது!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற 2 இளைஞர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வெள்ளமடையில் குடியிருந்து வருபவர் பெருமாள். இவர் நேற்று முந்தினம் இரவு வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

காலை வந்து பார்த்த போது, அவரது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பெருமாள் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளர்.

இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது அது திருடப்பட்ட வாகனம் என தெரியவந்தது.

இதையடுத்து அதில் வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பைக்கையும் மீட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...