கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே பைக் திருட்டு - இருவர் கைது!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற 2 இளைஞர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வெள்ளமடையில் குடியிருந்து வருபவர் பெருமாள். இவர் நேற்று முந்தினம் இரவு வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

காலை வந்து பார்த்த போது, அவரது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பெருமாள் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளர்.

இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது அது திருடப்பட்ட வாகனம் என தெரியவந்தது.

இதையடுத்து அதில் வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பைக்கையும் மீட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...