கோவையில் மழையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியின் போது கிரேன் கவிழ்ந்து விபத்து!

கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.புரம் ஆகிய இடங்களில் கனமழை காரணமாக சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியின் போது, கிரேன் வாகனம் திடீரென கவிழ்ந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக சுதாரித்து கொண்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியின் போது, கிரேன் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் நேற்றிரவு ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதன் காரணமாக கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் மாநகரில் உள்ள பல்வேறு மேம்பாலங்களுக்கு அடியில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த சில மரங்கள் சாய்ந்தன. ரேஸ்கோர்ஸ் பகுதியில் மரம் சாய்ந்ததில் கார் ஒன்று சேதமடைந்தது.



அதேபோல் ஆர்எஸ்புரம் பகுதியிலும் சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த மரம் சாய்ந்ததில், மின் கம்பிகள் அறுந்து அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதனிடயே அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தன.



இந்த நிலையில் மரத்தினை அப்புறப்படுத்துவதற்காக கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு இருந்தது. கிரைன் வாகனத்தின் மூலம் மரத்தை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட போது எதிர்பாராத விதமாக கிரேன் வாகனம் சாய்ந்து விபத்திற்கு உள்ளானது. அப்போது, அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து அங்கிருந்து நகர்ந்துச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



தற்போது கிரேன் வாகனத்தை மேலும் 2 கிரேன்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பின்னர் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...