பல்லடம் அருகே வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை!

பல்லடம் அருகேயுள்ள அல்லாபுரம் பகுதியில் ராஜேந்திர பிரசாத் என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார், மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அல்லாபுரம் செல்லும் சாலையில் உள்ளது ராயல்பார்க் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (64). இவர் தனது மனைவி வரலட்சுமி (63) உடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலவிஜய் டென்மார்க் நாட்டிலும் மற்றும் மகள் நிவேதா பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜேந்திரபிரசாத் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்த நிலையில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள முசிறிக்கு நேற்று காலை (10.04.2023) வீட்டை பூட்டிவிட்டு இருவரும் காரில் சென்றுள்ளனர்.



நிகழ்ச்சி முடிந்து இன்று காலை ராஜேந்திர பிரசாத் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.



தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 சவரன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளை சம்பவம் பல்லடம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்டு தப்பிஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...