கோவை அருகே சம்பளம் கேட்க சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு!

கோவை நெகமம் அருகே கட்டிட வேலை செய்யும் இடத்தில் பெண் ஒருவருக்கு உடன் பணியாற்றும் கட்டிட தொழிலாளி விஜயன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்ததாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை அருகே சம்பளம் கேட்கச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டிய கட்டிட தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் நெகமம் அடுத்த வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர் தான் வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரியும் கட்டிட தொழிலாளி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாக புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். எனக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். நான் எனது ஊரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி விஜயன் (45) என்பவருடன் கட்டிட வேலைக்கு சென்று வருகிறேன்.

வேலை செய்யும் இடத்தில் விஜயன் தொடர்ந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார். இது குறித்து நான் கட்டிட உரிமையாளரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் விஜயனை கண்டித்து அனுப்பினார்.

இந்நிலையில், சம்பள பணம் வாங்குவதற்காக விஜயனின் வீட்டிற்கு சென்ற போது, அவர் என்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். அப்போது, நான் சத்தமிட்ட நிலையில், இங்கு நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

எனவே எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் கட்டிட தொழிலாளி விஜயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் வேலை செய்யும் இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...