காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் பெண் ஒருவரது சடலம் எரிந்த நிலையில், மீட்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில், சிறிய அறை உள்ள பகுதியில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட பொது மக்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எரிந்த நிலையிலிருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் துறையின் ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த பெண் யார்? எதற்காக இங்கு வந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

முன்னதாக காந்திபுரம் பேருந்து நிலையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...