காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் பெண் ஒருவரது சடலம் எரிந்த நிலையில், மீட்கப்பட்டது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில், சிறிய அறை உள்ள பகுதியில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட பொது மக்கள் காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எரிந்த நிலையிலிருந்த பெண்ணின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் துறையின் ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்த பெண் யார்? எதற்காக இங்கு வந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

முன்னதாக காந்திபுரம் பேருந்து நிலையம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...