மாசற்ற காற்றை சுவாசிக்க மரம் நடுங்கள்..! - கோவையில் ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி விழிப்புணர்வு

கோவையில் மரம் நடும் திட்டத்தை வலியுறுத்தும் வகையில்  வ.உ.சி சேவா அறக்கட்டளை சார்பில் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்தி நூதன முறையில் விழிப்புணர்வு பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையை சேர்ந்த வ.உ.சி சேவா அறக்கட்டளையினர் ஒரே ஒரு மரம் நடுவோம் நாளைய தலைமுறை காப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் மாதிரி ஆக்சிஜன் சிலிண்டரை அணிந்தவாறு விழிப்புணர்வை தொடங்கியுள்ளனர்.

அடுத்த தலைமுறை மாசற்ற காற்றை சுவாசிப்பதை உறுதி செய்யும் வகையிலும், காற்றை காசு கொடுத்து வாங்கும் சூழ்நிலை உருவாகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் மாதிரி ஆக்ஸிஜன் சிலிண்டரை அணிந்தவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாதிரி ஆக்ஸிஜன் சிலிண்டரை முதுகில் பொருத்தியவாறு பதாகைகளை ஏந்தி வ.உ.சி. சேவா அறக்கட்டளையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது குறித்துப் பேசிய அவர்கள்,இனி வரும் நாட்களில் இது போன்ற விழிப்புணர்வை வாரம் தோறும் பல்வேறு இடங்களில் முன்னெடுக்க உள்ளோம்.சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களை வெட்டினால், அதற்கு ஈடாக கூடுதல் மரங்களை வேறு இடங்களில் வளர்க்க வேண்டும். அரசாங்கம் மட்டும் இல்லாமல் பொதுமக்களும் தாமாக முன்வந்து மரங்களை வளர்க்க வேண்டும், என்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வ.உ.சி சேவா அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி முத்துவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...