திருப்பூரில் கோவிலில் நகைகள் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கொண்டு வடமாநிலத்தவரை கைது செய்த போலீஸ்!

திருப்பூர் அடுத்த செவந்தாம்பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் உண்டியல் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு நடத்தி விசாரணையில், ஜீவா நகரில் வசித்து வந்த வடமாநில நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த செவந்தாம்பாளையம் அருகே கோவில் நகைகளை திருடிச்சென்ற வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் செவந்தாம்பாளையம் பகுதியில் மாகாளியம்மன் திருக்கோவிலில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல் நேற்று இரவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், இன்று காலை கோவிலுக்கு சென்ற பொதுமக்கள், அங்கு கோவில் பூட்டு உடைக்கப்பட்டும், அறையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.



இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது சாமி கழுத்தில் இருந்த 12 பவுன் நகை மற்றும் கோவில் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.



தொடர்ந்து, அருகில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது அதே பகுதியை சேர்ந்த ஜீவா நகரில் வசித்து வந்த வடமாநிலத்தவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக வடமாநில நபரை கைது செய்த போலீசார், நல்லூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...