கோவையில் இன்று முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்படாது - மால் நிர்வாகங்கள் அறிவிப்பு!

கோவையில் உள்ள ஃப்ரூக்பீல்டு மால், புரோசோன் மால் மற்றும் ஃபன் மால் ஆகிய மூன்று மால்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும், படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் இன்று முதல் அப்படம் திரையிடப்படாது என மால் நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.



கோவை: கோவையில் தி கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட மூன்று மால்களில் உள்ள திரையரங்களில் நாளை முதல் அப்படம் திரையிடப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஃப்ரூக்பீல்டு மால், புரோசோன் மால் மற்றும் ஃபன் மால் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் திரைப்படம் வெளியிட தடை விதிக்க வலியுறுத்து இஸ்லாமிய அமைப்பினர், நாம் தமிழர் கட்சியினர் மால்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பாதுகாப்பிற்காக அங்கு சுமார் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும், படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் கோவையில் உள்ள மூன்று மால்களில் உள்ள திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என திரையரங்கு நிர்வாகத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...