கோவையில் இன்று முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்படாது - மால் நிர்வாகங்கள் அறிவிப்பு!

கோவையில் உள்ள ஃப்ரூக்பீல்டு மால், புரோசோன் மால் மற்றும் ஃபன் மால் ஆகிய மூன்று மால்களில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும், படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் இன்று முதல் அப்படம் திரையிடப்படாது என மால் நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.



கோவை: கோவையில் தி கேரளா ஸ்டோரி திரையிடப்பட்ட மூன்று மால்களில் உள்ள திரையரங்களில் நாளை முதல் அப்படம் திரையிடப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகத்தில் வெளியானது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள ஃப்ரூக்பீல்டு மால், புரோசோன் மால் மற்றும் ஃபன் மால் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் திரைப்படம் வெளியிட தடை விதிக்க வலியுறுத்து இஸ்லாமிய அமைப்பினர், நாம் தமிழர் கட்சியினர் மால்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, பாதுகாப்பிற்காக அங்கு சுமார் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும், படத்திற்கு போதிய வரவேற்பு இல்லாததால் கோவையில் உள்ள மூன்று மால்களில் உள்ள திரையரங்குகளில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என திரையரங்கு நிர்வாகத்தினர் முடிவு எடுத்துள்ளனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...