திருப்பூர் வடமாநில நபர் சந்தேகத்தின் பேரில் கைது - பின்னால் சென்ற மனநலம் பாதித்த சிறுவனை காணவில்லை என புகார்!

திருப்பூரில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பூஷன் என்பவரை போலீசார், கஞ்சா விற்பனை செய்வதாக சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற வாகனத்தின் பின்னால் அழுதுகொண்டே சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: வடமாநில நபர் கஞ்சா விற்பதாக காவல் நிலையம் அழைத்துச் சென்ற நிலையில், அவருடன் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பூஷன் என்பவர் தனது மனைவி ராணி தேவி ஆகியோர் திருப்பூர், சந்தைப்பேட்டை பகுதியில் இரண்டு ஆண் குழந்தைகளோடு டீக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருப்பூர் தெற்கு காவல் துறையினர் பூசன் கஞ்சா விற்பனை செய்வதாக சந்தேகத்தின் பேரில் அவரை விசாரணைக்கு போலீஸ் வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவரது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த ஐந்து வயது மகனான கெளரப்குமார் என்ற சிறுவன் தந்தை சென்ற காவல்துறை வாகனத்திற்கு பின்னே அழுதவாறுச் சென்றுள்ளார்.

விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த பூஷனிடம் மகனை காணவில்லை என மனைவி தெரிவித்த நிலையில் அதிர்ச்சி அடைந்த பூஷன் மற்றும் அவரது மனைவி அருகில் இருந்த கடையின் சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தனர்.



அப்போது மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன், காவல்துறை வாகனத்திற்கு பின்னால் சென்றதும், பின்பு காணாமல் போனதும் தெரிய வந்தது. இது குறித்து வட மாநில தம்பதியினர் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பிற்கு புகார் அளித்து காணாமல் போன சிறுவனை தேடி வருகின்றனர்.

இதனிடையே பூஷன் மீது மூன்று வருடத்திற்கு முன்பாக திருப்பூரில் சட்டவிராத புகையிலை பொருட்கள் விற்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...