நீலகிரியில் களைகட்டும் கோடை சீசன் - கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சி தொடக்கம்!

கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று 12-வது காய்கறி கண்காட்சி தொடங்கியுள்ளது. 600 கிலோ குடைமிளகாய், 250 கிலோ பஜ்ஜி மிளகாய் கொண்டு 15 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட மக்காச்சோளம் உருவம், 650 கிலோ உருளை கிழங்கால் உருவாக்கப்பட்ட கம்பு செடி உருவம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.


நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம், தோட்டகலைத் துறை, சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன.



இந்நிலையில், கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது.



இந்த காய்கறி கண்காட்சியில் 600 கிலோ குடைமிளகாய், 250 கிலோபஜ்ஜி மிளகாய் கொண்டு 15 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட மக்காச்சோளம் உருவம், 650 கிலோ உருளை கிழங்கால் உருவாக்கப் பட்ட கம்பு செடி உருவம், பூசணி காய்களால் உருவாக்கப்பட்ட ராட்சத டிராகன், கத்திரிக்காய்களால் உருவாக்கபட்ட 3 யானைகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.



இதுதவிர, 31 காய்கறிகளால் உருவாக்கபட்ட பல்வேறு உருவங்கள் கண்ணை கவரும் வகையில் அமைந்திருந்தன.



மேலும், பல்வேறு மாவட்டங்கள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளில் காய்கறிகளால் அலங்கரிக்கபட்ட பாண்டா கரடி, பவானிசாகர் அணை, இருவாச்சி பறவை, ஒட்டக சிவிங்கி, வரையாடுகள், மயில், பாகற்காயால் உருவாக்கப்பட்ட முதலை ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றன.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...