நீலகிரியில் களைகட்டும் கோடை சீசன் - கோத்தகிரியில் 12வது காய்கறி கண்காட்சி தொடக்கம்!

கோத்தகிரி நேரு பூங்காவில் இன்று 12-வது காய்கறி கண்காட்சி தொடங்கியுள்ளது. 600 கிலோ குடைமிளகாய், 250 கிலோ பஜ்ஜி மிளகாய் கொண்டு 15 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட மக்காச்சோளம் உருவம், 650 கிலோ உருளை கிழங்கால் உருவாக்கப்பட்ட கம்பு செடி உருவம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.


நீலகிரி: மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டி வருகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகம், தோட்டகலைத் துறை, சுற்றுலா துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபடுகின்றன.



இந்நிலையில், கோடை சீசனின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் 12-வது காய்கறி கண்காட்சி இன்று தொடங்கியது.



இந்த காய்கறி கண்காட்சியில் 600 கிலோ குடைமிளகாய், 250 கிலோபஜ்ஜி மிளகாய் கொண்டு 15 அடி உயரத்திற்கு உருவாக்கப்பட்ட மக்காச்சோளம் உருவம், 650 கிலோ உருளை கிழங்கால் உருவாக்கப் பட்ட கம்பு செடி உருவம், பூசணி காய்களால் உருவாக்கப்பட்ட ராட்சத டிராகன், கத்திரிக்காய்களால் உருவாக்கபட்ட 3 யானைகள் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.



இதுதவிர, 31 காய்கறிகளால் உருவாக்கபட்ட பல்வேறு உருவங்கள் கண்ணை கவரும் வகையில் அமைந்திருந்தன.



மேலும், பல்வேறு மாவட்டங்கள் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளில் காய்கறிகளால் அலங்கரிக்கபட்ட பாண்டா கரடி, பவானிசாகர் அணை, இருவாச்சி பறவை, ஒட்டக சிவிங்கி, வரையாடுகள், மயில், பாகற்காயால் உருவாக்கப்பட்ட முதலை ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துவருகின்றன.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...