வால்பாறையில் குழந்தைகள் காப்பகம், கோயிலை சேதப்படுத்திய யானைகள்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புப் பகுதியில் புகுந்த 4 காட்டு யானைகள், அங்கிருந்த குழந்தைகள் காப்பகம், ரேஷன் கடை, கோவில் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் நான்கு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன.



அப்போது, அங்கிருந்த குழந்தைகள் காப்பகம், கோவில், நியாய விலை கடை, எஸ்டேட் பொருட்கள் வைக்கும் அறை ஆகியவற்றின் ஜன்னல், கதவு, சுவர், உள் இருந்த பொருட்கள் போன்றவற்றை உடைத்து சூறையாடின.



பின்னர் அந்த காட்டு யானைகள், எஸ்டேட் வாகனத்தின் மூலம் வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.



காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் வனத்துறையினர் தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...