பல்லடத்தில் தென்னை சாகுபடி குறித்த வயல்மட்டக் கள ஆய்வு - செய்தித்துறை அமைச்சர் பங்கேற்பு!

பல்லடம் அருகே பெருந்தொழுவு ஊராட்சியில் நடைபெற்ற தென்னையில் பூச்சி நோய் மற்றும் உர நிர்வாகம் குறித்த வயல்மட்ட களஆய்வில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், பெருந்தொழுவு ஊராட்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தென்னையில் பூச்சி, நோய் மற்றும் உர நிர்வாகம் குறித்த வயல் மட்ட களஆய்வு நடைபெற்றது.



இந்த ஆய்வானது செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையிலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வினித் முன்னிலையிலும் நடைபெற்றது.

இது குறித்துப் பேசிய செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்,



தமிழக அரசு தென்னையை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

நீண்ட கால பயிரான தென்னையில் நோய் பாதிப்பு என்ற சூழ்நிலையை நீக்க வேண்டும் என்கிற வகையில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 52 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத்,



இயற்கை உரங்களை பயன்படுத்தி தென்னை மகசூலை அதிகரிக்கவும் விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.

இந்த களஆய்வில் தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர்கள், வேளாண் இணை இயக்குநர் மாரியப்பன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர்கள், மற்றும் தென்னை விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...