கோவை பன்னிமடையில் கிராம நிர்வாக அலுவலகம் திறப்பு - திரளாக கலந்துகொண்ட பொதுமக்கள்!

கோவை பன்னிமடையில் பொதுமக்கள் நிதியில் ரூபாய்.2.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், அரசியல்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. பன்னிமடை, கணுவாய், தாளியூர், கஸ்தூரிநாயக்கன்புதூர் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்த அலுவலகம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டதால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த இந்த அலுவலக கட்டிடத்தை புதுப்பிக்க பன்னிமடை கிராம மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து மக்கள் அனைவரும் இணைந்து ரூ.2.25 லட்சம் பணத்தை திரட்டினர்.

தொடர்ந்து அவர்கள் இரவு-பகல் என பாராமல் அலுவலக கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இடித்து புதியதாக கட்டினர். மேலும்,அங்கு பாத்ரூம், தண்ணீருக்காக மோட்டார் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக புதிய கிராம நிர்வாக அலுவலகம் போர்டு என அனைத்தும் உருவாக்கப்பட்டது.



இந்த புதுப்பிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவகக் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக ஒன்றிய செயலாளர் சி.எம்.கே.கிருஷ்ணகுமார், துடியலூர் வருவாய் அலுவலர் சரத், பன்னிமடை கிராம நிர்வாக அலுவலர் ராஜா, ஊராட்சி கவுன்சிலர்கள் பி.டி.கோபாலசாமி, தங்கராஜ், சிவகுமார், சாந்தி, மாரித்தாய், ஜெயமணி,



அஞ்சல் அதிகாரி டி.பி.ராஜேந்திரன் குடும்பத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள் தண்டபாணி, சம்பத்குமார், மகேந்திரகுமார், ராஜசேகரன், விஜயகுமார், அய்யாசாமி, காளியப்பன், துடியலூர் கிராம நிர்வாக அலுவலர் காட்டுதுரை, அலுவலர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...