கோவை பன்னிமடையில் கிராம நிர்வாக அலுவலகம் திறப்பு - திரளாக கலந்துகொண்ட பொதுமக்கள்!

கோவை பன்னிமடையில் பொதுமக்கள் நிதியில் ரூபாய்.2.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், அரசியல்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. பன்னிமடை, கணுவாய், தாளியூர், கஸ்தூரிநாயக்கன்புதூர் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்த அலுவலகம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டதால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த இந்த அலுவலக கட்டிடத்தை புதுப்பிக்க பன்னிமடை கிராம மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து மக்கள் அனைவரும் இணைந்து ரூ.2.25 லட்சம் பணத்தை திரட்டினர்.

தொடர்ந்து அவர்கள் இரவு-பகல் என பாராமல் அலுவலக கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இடித்து புதியதாக கட்டினர். மேலும்,அங்கு பாத்ரூம், தண்ணீருக்காக மோட்டார் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக புதிய கிராம நிர்வாக அலுவலகம் போர்டு என அனைத்தும் உருவாக்கப்பட்டது.



இந்த புதுப்பிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவகக் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக ஒன்றிய செயலாளர் சி.எம்.கே.கிருஷ்ணகுமார், துடியலூர் வருவாய் அலுவலர் சரத், பன்னிமடை கிராம நிர்வாக அலுவலர் ராஜா, ஊராட்சி கவுன்சிலர்கள் பி.டி.கோபாலசாமி, தங்கராஜ், சிவகுமார், சாந்தி, மாரித்தாய், ஜெயமணி,



அஞ்சல் அதிகாரி டி.பி.ராஜேந்திரன் குடும்பத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள் தண்டபாணி, சம்பத்குமார், மகேந்திரகுமார், ராஜசேகரன், விஜயகுமார், அய்யாசாமி, காளியப்பன், துடியலூர் கிராம நிர்வாக அலுவலர் காட்டுதுரை, அலுவலர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...