கோவை பன்னிமடையில் கிராம நிர்வாக அலுவலகம் திறப்பு - திரளாக கலந்துகொண்ட பொதுமக்கள்!

கோவை பன்னிமடையில் பொதுமக்கள் நிதியில் ரூபாய்.2.25 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், அரசியல்கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.



கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. பன்னிமடை, கணுவாய், தாளியூர், கஸ்தூரிநாயக்கன்புதூர் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்த அலுவலகம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டதால், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த இந்த அலுவலக கட்டிடத்தை புதுப்பிக்க பன்னிமடை கிராம மக்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து மக்கள் அனைவரும் இணைந்து ரூ.2.25 லட்சம் பணத்தை திரட்டினர்.

தொடர்ந்து அவர்கள் இரவு-பகல் என பாராமல் அலுவலக கட்டிடத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இடித்து புதியதாக கட்டினர். மேலும்,அங்கு பாத்ரூம், தண்ணீருக்காக மோட்டார் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக புதிய கிராம நிர்வாக அலுவலகம் போர்டு என அனைத்தும் உருவாக்கப்பட்டது.



இந்த புதுப்பிக்கப்பட்ட கிராம நிர்வாக அலுவகக் கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக ஒன்றிய செயலாளர் சி.எம்.கே.கிருஷ்ணகுமார், துடியலூர் வருவாய் அலுவலர் சரத், பன்னிமடை கிராம நிர்வாக அலுவலர் ராஜா, ஊராட்சி கவுன்சிலர்கள் பி.டி.கோபாலசாமி, தங்கராஜ், சிவகுமார், சாந்தி, மாரித்தாய், ஜெயமணி,



அஞ்சல் அதிகாரி டி.பி.ராஜேந்திரன் குடும்பத்தினர், ஊர் முக்கியஸ்தர்கள் தண்டபாணி, சம்பத்குமார், மகேந்திரகுமார், ராஜசேகரன், விஜயகுமார், அய்யாசாமி, காளியப்பன், துடியலூர் கிராம நிர்வாக அலுவலர் காட்டுதுரை, அலுவலர் குமார் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...