கட்டடப் பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் - தமிழக அரசுக்கு பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் போலி பொறியாளர்களை களையெடுக்கவும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும் பொறியாளர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் என்று கட்டிட பொறியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் பல்லடம் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஏற்பு விழா நடைபெற்றது.

அதில், சங்கத்தின் 2022 ஆம் ஆண்டில் முக்கிய பொறுப்பில் இருந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.



இதன் தொடர்ச்சியாக பல்லடம் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக சிற்பி செல்வராஜ், துணை தலைவராக மோகனகண்ணன், செயலாளர் தனபால்,பொருளாளர் பொன்.சக்திவேல், ஆகியோர் உறுதிமொழி அளித்து பதவியேற்றுக் கொண்டனர்.



முன்னாள் பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டிட பொறியாளர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மோகன் ராஜா, தமிழ்நாடு முழுவதும் கட்டுமான தொழிலை நம்பி 10 ஆயிரம் கட்டிட பொறியாளர்களும் 50 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதேபோன்று பட்டம் பெறாத போலி பொறியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும் போலி பொறியாளர்களை களையெடுக்கவும் தமிழக அரசு உடனடியாக மருத்துவத்துறை, வழக்கறிஞர்களுக்கு என பார் கவுன்சில் உள்ளதுபோல பொறியாளர்களுக்கு என தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும். கட்டிட பொறியாளர்களுக்கு என தனியாக வாரியம் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...