கட்டடப் பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் - தமிழக அரசுக்கு பொறியாளர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தில் போலி பொறியாளர்களை களையெடுக்கவும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும் பொறியாளர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் என்று கட்டிட பொறியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ராயர்பாளையத்தில் பல்லடம் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஏற்பு விழா நடைபெற்றது.

அதில், சங்கத்தின் 2022 ஆம் ஆண்டில் முக்கிய பொறுப்பில் இருந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.



இதன் தொடர்ச்சியாக பல்லடம் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான புதிய தலைவராக சிற்பி செல்வராஜ், துணை தலைவராக மோகனகண்ணன், செயலாளர் தனபால்,பொருளாளர் பொன்.சக்திவேல், ஆகியோர் உறுதிமொழி அளித்து பதவியேற்றுக் கொண்டனர்.



முன்னாள் பொறுப்பாளர்கள் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட பொறுப்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டிட பொறியாளர் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மோகன் ராஜா, தமிழ்நாடு முழுவதும் கட்டுமான தொழிலை நம்பி 10 ஆயிரம் கட்டிட பொறியாளர்களும் 50 லட்சம் தொழிலாளர்களும் உள்ளனர். கட்டுமான பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அதேபோன்று பட்டம் பெறாத போலி பொறியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும் போலி பொறியாளர்களை களையெடுக்கவும் தமிழக அரசு உடனடியாக மருத்துவத்துறை, வழக்கறிஞர்களுக்கு என பார் கவுன்சில் உள்ளதுபோல பொறியாளர்களுக்கு என தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும். கட்டிட பொறியாளர்களுக்கு என தனியாக வாரியம் அமைத்து தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...