முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து கோவையில் ஆட்சியர் தலைமையில் நிலைக்குழு கூட்டம்!

முதலமைச்சர் காலை உணவு திட்டமானது வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது தொடர்பாக கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இரண்டாம் கட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மாவட்ட அளவிலான நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எதிர்வரும் கல்வி ஆண்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவிலான நிலைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மகளிர் திட்ட இயக்குனர் செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் சத்துணவு திட்ட நேர்முக உதவியாளர் மகேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவை மாவட்டத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் இந்த காலை உணவு திட்டத்தை 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கு எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...