முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து கோவையில் ஆட்சியர் தலைமையில் நிலைக்குழு கூட்டம்!

முதலமைச்சர் காலை உணவு திட்டமானது வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது தொடர்பாக கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நிலைக்குழு கூட்டத்தில் முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.


கோவை: கோவையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இரண்டாம் கட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மாவட்ட அளவிலான நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எதிர்வரும் கல்வி ஆண்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக மாவட்ட அளவிலான நிலைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மகளிர் திட்ட இயக்குனர் செல்வம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் சத்துணவு திட்ட நேர்முக உதவியாளர் மகேஸ்வரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கோவை மாவட்டத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் இந்த காலை உணவு திட்டத்தை 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி குழந்தைகளுக்கு எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...