கோவையில் மதநல்லிணக்கம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

மத நல்லிணக்கம் குறித்து கோவை மாநகரில் உள்ள கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளி வாசல்களுக்கு ஊர்வலமாக சென்று பதாகைகள் ஏந்திபடி மாநகராட்சி அரசு பள்ளியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கோவையில் மத நல்லிணக்கம் குறித்து பொது மக்களிடையே அரசு பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவையில் உள்ள சாந்தி ஆசிரமம், குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, ஜமா அத் இஸ்லாமி ஹிந்த், உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் பள்ளி மாணவர்களை கொண்டு மதநல்லிக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கோவை கோணியம்மன் கோவில், அதன் அருகில் உள்ள மைக்கேல் தேவாலயம், டவுன்ஹால் பகுதியில் உள்ள பள்ளிவாசல், ஜெயின் கோவில், உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஒவ்வொரு மதமும் மத நல்லிணக்கம் குறித்து என்ன கூறுகிறது என்பது குறித்தான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...