பல்லடம் அருகே விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் செல்வவிநாயகர் திருக்கோவில் குடமுழுக்கு விழா மற்றும் மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா மற்றும் மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

கடந்த இரண்டாம் தேதி திருக்குடங்கள் மற்றும் முளைப்பாளிகை எடுத்து, விழா தொடங்கிய நிலையில் வேள்விச்சாலை முதல்நிலை வழிபாடுகள், திருவாயில் வழிபாடு, வேள்வி மேடை வழிபாடு, சிறப்பாக நடைபெற்றது.



இதன் தொடர்ச்சியாக, முக்கிய நிகழ்வாக செல்வ விநாயகர் மூலவர் திருக்கோவில் விமான கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு திருவிழா நடைபெற்றது.



சென்சேரி மலை ஆதினம் கயிலை புனிதர் முத்து சிவராமசாமி அடிகளார் தலைமையில் யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்துவரப்பட்டு, தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க, விமான கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.



இதையடுத்து, விநாயகரின் மூலவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோன்று மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. திருக்குட நன்னீராட்டு திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...