பல்லடம் அருகே விநாயகர் கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் செல்வவிநாயகர் திருக்கோவில் குடமுழுக்கு விழா மற்றும் மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னூர் கிராமத்தில் அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா மற்றும் மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

கடந்த இரண்டாம் தேதி திருக்குடங்கள் மற்றும் முளைப்பாளிகை எடுத்து, விழா தொடங்கிய நிலையில் வேள்விச்சாலை முதல்நிலை வழிபாடுகள், திருவாயில் வழிபாடு, வேள்வி மேடை வழிபாடு, சிறப்பாக நடைபெற்றது.



இதன் தொடர்ச்சியாக, முக்கிய நிகழ்வாக செல்வ விநாயகர் மூலவர் திருக்கோவில் விமான கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு திருவிழா நடைபெற்றது.



சென்சேரி மலை ஆதினம் கயிலை புனிதர் முத்து சிவராமசாமி அடிகளார் தலைமையில் யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்துவரப்பட்டு, தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க, விமான கலசம் மீது புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.



இதையடுத்து, விநாயகரின் மூலவர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோன்று மாகாளியம்மன் திருக்கோவில் ஆண்டு விழாவை முன்னிட்டு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. திருக்குட நன்னீராட்டு திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...