கோவை அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - பழக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் பலி

கோவை மலுமிச்சம்பட்டி அருகே காரும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பழக்கடை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த கார் ஓட்டுநரான அகேஷ்குமார் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ரவி (வயது45).

இவர் தனது மகள் கல்லூரி படிப்பிற்காக தற்போது கோவை ஒத்தக்கால் மண்டபம் அசோக் ரெசிடென்சி பகுதியில் குடும்பத்துடன் தங்கி, மலுமிச்சம்பட்டி அருகே கந்தன் ப்ரூட் ஸ்டால் என்ற பழக்கடை வைத்துள்ளார். இவரது கடையில், ஒத்தக்கால்மண்டபம் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ராமன் (வயது50). என்பவரும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு இருவரும் வழக்கம்போல் பணி முடிந்து இரவு 11 மணியளவில் ரவியின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். அப்போது பொள்ளாச்சி - கோவை சாலையில் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே அவர்களது வாகனம் வேகமாகச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.



இதில், தூக்கி வீசப்பட்ட ரவி மற்றும் ராமன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த கார் ஓட்டுனரான அகேஷ்குமார் (24) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...