கோவை அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - பழக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் பலி

கோவை மலுமிச்சம்பட்டி அருகே காரும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பழக்கடை உரிமையாளர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த கார் ஓட்டுநரான அகேஷ்குமார் என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ரவி (வயது45).

இவர் தனது மகள் கல்லூரி படிப்பிற்காக தற்போது கோவை ஒத்தக்கால் மண்டபம் அசோக் ரெசிடென்சி பகுதியில் குடும்பத்துடன் தங்கி, மலுமிச்சம்பட்டி அருகே கந்தன் ப்ரூட் ஸ்டால் என்ற பழக்கடை வைத்துள்ளார். இவரது கடையில், ஒத்தக்கால்மண்டபம் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ராமன் (வயது50). என்பவரும் வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு இருவரும் வழக்கம்போல் பணி முடிந்து இரவு 11 மணியளவில் ரவியின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு கிளம்பி உள்ளனர். அப்போது பொள்ளாச்சி - கோவை சாலையில் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள தனியார் கம்பெனி அருகே அவர்களது வாகனம் வேகமாகச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது.



இதில், தூக்கி வீசப்பட்ட ரவி மற்றும் ராமன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செட்டிபாளையம் போலீசார், இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த கார் ஓட்டுனரான அகேஷ்குமார் (24) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...