பொள்ளாச்சியில் மக்னா யானையை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சியில் மீண்டும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானையை விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து சேதமாக்கி வருவதால், உயிர்சேதம் ஏற்படுவதற்குள் யானையை பிடிக்க வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



கோவை: மக்னா யானையை பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் மயக்கூசி செலுத்தி பிடிபட்ட மக்னா யானையை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான டாப்சிலிப் பகுதியில் விடப்பட்டது.

இந்த யானை கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி அன்று வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து கோவையை நோக்கிச் சென்றது மீண்டும் மயக்கூசி செலுத்தி பிடிக்கப்பட்ட நிலையில் யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை அடுத்துள்ள மந்திரி மட்டம் பகுதியில் விடப்பட்டு கண்காணித்து வந்தனர்..

ஆனால் தற்போது ரேடியோ காலர் கருவி பழுதாகி செயலிழந்து உள்ளதால் யானை நகர்ந்து செல்லும் இடத்தை கண்காணிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வந்தனர்.



இந்நிலையில் மக்னாயானை மீண்டும் இரண்டாவது முறையாக வனப்பகுதியை விட்டு வெளியேறி பொள்ளாச்சி சரளப்பதி பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்து சுற்றித் திரிகிறது.



விவசாய நிலத்திற்குள் புகுந்த யானை குடியிருப்புக்குள் வராமல் இருக்க டாப்சிலிப் பகுதியிலிருந்து மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.



ஆனால் இந்த யானை வனப்பதிக்குள் செல்லாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்திற்குள் புகுந்து 57 மா மரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது மேலும் அப்பகுதியில் பல தென்னை மரங்களையும் சாய்த்து யானை சேதப்படுத்தியுள்ளது.



அதேபோல் அப்பகுதியில் மக்கள் நடமாடுவதற்கு மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள் இந்த மக்னா யானை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் மனிதர்களை தாக்கி விடுமோ என்ற அச்சத்திலும் மீண்டும் விவசாய நிலத்திற்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகளும் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த யானையால் வீடுகளில் இரவு முழுதும் குழந்தைகளை வைத்து பாதுகாப்பின்றி உறங்குவதாகவும் இந்த மக்னா யானையால் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த யானையை விரைவில் பிடித்து கூண்டில் அடைக்க வேண்டும். இல்லை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...