கோவையில் தனியார் நிறுவன ஊழியரின் பைக் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை அரசூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விஷ்ணுவர்தன் என்பவரின் இருசக்கர வாகனத்தை, மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடிச் சென்றார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.



கோவை: கோவை அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுவர்தன். தனியார் நிறுவன ஊழியரான இவர், ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஒண்டிப்புதூர் பள்ளி அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றார்.

ஜெராக்ஸ் எடுத்துவிட்டு ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிக்கொண்டு தப்பியோடினார்.



இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுவர்தன், திருட்டு தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பைக் கொள்ளையில் ஈடுபட்ட நபரைத் தேடிவருகின்றனர்.

இந்த பைக் திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...