கோவையில் இளைஞர்களை குறிவைத்து உயர்ரக போதைப்பொருள் விற்பனை - கல்லூரி மாணவரை கைது செய்த தனிப்படை!

கோவையில் இளைஞர்களை குறிவைத்து methamphetamine என்ற உயர்ரக போதை பொருள் விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்ட தனிப்படை போலீசார், கேரள மாநிலத்தை சேர்ந்த அகில் என்ற கல்லூரி மாணவரை கைது செய்து அவரிடம் இருந்து 6 கிராம் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவையில் இளைஞர்களை குறிவைத்து methamphetamine என்ற உயர்ரக போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உயர்ரக போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக துடியலூர் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

மேலும் காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் ஒருவர் தனது whatsapp மூலம் இளைஞர்களை குறிவைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இந்த ரகசிய தகவல்களின் அடிப்படையில், போலீசார் கல்லூரி மாணவரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அந்த மாணவர் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த போது தனிப்படை போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்த ராவணூரை சேர்ந்த ஜெயபால் என்பவரது மகன் அகில் (26) என்பது தெரியவந்தது. இவர் காளப்பட்டியில் உள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மாணவர் அகில் பெங்களூரை சேர்ந்த ரோகித் என்பவர் மூலம் methamphetamine என்ற போதை மாத்திரையை கோவைக்கு வாங்கி வந்து கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 6 கிராம் உயர்ரக போதை பொருளாக methamphetamine போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை உயர் ரக போதை பொருட்கள் விற்பனை செய்வதாக ஐந்து நபர்கள் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 23 கிராம் எடையுள்ள methamphetamine போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...