பொள்ளாச்சி அருகே விபத்தில் இளைஞர் பலி - விபத்துக்கு காரணமான தடுப்பை அகற்றக்கோரி சாலை மறியல்!

பொள்ளாச்சி - உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சாலை தடுப்பு கம்பியில் மோதி விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்திற்கு காரணமான சாலை தடுப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சி - உடுமலை சாலையில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகேயுள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதி சேர்ந்தவர் இளைஞர் விக்னேஷ். இவர் பொள்ளாச்சி - உடுமலை சாலை நல்லம்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இன்று மதியம் தொழிற்சாலை வேலை சம்பந்தமாக பொள்ளாச்சி வந்துவிட்டு மீண்டும் நல்லாம்பள்ளியில் உள்ள தொழிற்சாலை நோக்கி இருசக்கர வாகனத்தில் விக்னேஷ் சென்று கொண்டிருந்தார்.

அப்போது உடுமலை சாலை சின்னம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி விக்னேஷ் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடது புறமாக இருந்த தடுப்புக் கம்பியில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,



இதனிடையே பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை நடுவே இரும்பு தடுப்பு கம்பியால் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், விபத்துக்கு காரணமாக இருக்கும் இரும்பு தடுப்புக்கம்பியை அகற்ற வலியுறுத்தி சின்னாம்பாளையம் பகுதி சேர்ந்த பொதுமக்கள் திடீரென உடுமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் பொள்ளாச்சி - உடுமலை சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, விபத்துக்கு காரணமாக உள்ள இரும்பு தடுப்பு கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...