பொள்ளாச்சி அருகே விபத்தில் இளைஞர் பலி - விபத்துக்கு காரணமான தடுப்பை அகற்றக்கோரி சாலை மறியல்!

பொள்ளாச்சி - உடுமலை சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சாலை தடுப்பு கம்பியில் மோதி விக்னேஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்திற்கு காரணமான சாலை தடுப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சி - உடுமலை சாலையில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகேயுள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதி சேர்ந்தவர் இளைஞர் விக்னேஷ். இவர் பொள்ளாச்சி - உடுமலை சாலை நல்லம்பள்ளியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இன்று மதியம் தொழிற்சாலை வேலை சம்பந்தமாக பொள்ளாச்சி வந்துவிட்டு மீண்டும் நல்லாம்பள்ளியில் உள்ள தொழிற்சாலை நோக்கி இருசக்கர வாகனத்தில் விக்னேஷ் சென்று கொண்டிருந்தார்.

அப்போது உடுமலை சாலை சின்னம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி விக்னேஷ் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடது புறமாக இருந்த தடுப்புக் கம்பியில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,



இதனிடையே பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலை நடுவே இரும்பு தடுப்பு கம்பியால் விபத்துக்கள் அதிகரித்து வருவதால், விபத்துக்கு காரணமாக இருக்கும் இரும்பு தடுப்புக்கம்பியை அகற்ற வலியுறுத்தி சின்னாம்பாளையம் பகுதி சேர்ந்த பொதுமக்கள் திடீரென உடுமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் பொள்ளாச்சி - உடுமலை சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, விபத்துக்கு காரணமாக உள்ள இரும்பு தடுப்பு கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...