பல்லடம் அருகே குட்டையில் கழிவுநீர் கலப்பதற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்!

பல்லடம் அருகே கரைப்புதூர் கிராமத்தில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கழிவுநீரை கரைப்புதூர் கிராமத்தில் உள்ள குட்டையில் திறந்து விடுவதை கண்டித்து கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் பழமை வாய்ந்த ஓடை மற்றும் குட்டை அமைந்துள்ளது.

ஆறு போன்று அகலம் கொண்ட இந்த ஓடையில், இரண்டு தடுப்பணைகளும் ஒரு அணைக்கட்டும் உள்ளது. மழைக்காலங்களில் இங்கு மழை நீர் தேக்கி வைக்கப்படுவதால் இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு நீராதாரமாகவும் இந்த ஓடை அமைந்துள்ளது.



ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஓடையால் பயன்பெற்று வரும் நிலையில், இந்த ஓடையில் ஏற்கனவே குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு நீர்வழிப் பாதை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.



இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து, அப்பகுதி மக்களின் நீராதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அருகிலுள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுநீரை இந்த ஓடையில் கலப்பதாக கூறி கரைப்புதூர் கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், கழிவு நீர் ஓடையில் கலப்பதை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து, கரைப்புதூர் கிராம மக்கள் திடீரென 200க்கும் மேற்பட்டோர் சின்னக்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் அரசு பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் குட்டையில் கழிவு நீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...