பல்லடம் அருகே குட்டையில் கழிவுநீர் கலப்பதற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்!

பல்லடம் அருகே கரைப்புதூர் கிராமத்தில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கழிவுநீரை கரைப்புதூர் கிராமத்தில் உள்ள குட்டையில் திறந்து விடுவதை கண்டித்து கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் பழமை வாய்ந்த ஓடை மற்றும் குட்டை அமைந்துள்ளது.

ஆறு போன்று அகலம் கொண்ட இந்த ஓடையில், இரண்டு தடுப்பணைகளும் ஒரு அணைக்கட்டும் உள்ளது. மழைக்காலங்களில் இங்கு மழை நீர் தேக்கி வைக்கப்படுவதால் இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு நீராதாரமாகவும் இந்த ஓடை அமைந்துள்ளது.



ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஓடையால் பயன்பெற்று வரும் நிலையில், இந்த ஓடையில் ஏற்கனவே குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு நீர்வழிப் பாதை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.



இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து, அப்பகுதி மக்களின் நீராதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அருகிலுள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுநீரை இந்த ஓடையில் கலப்பதாக கூறி கரைப்புதூர் கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், கழிவு நீர் ஓடையில் கலப்பதை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து, கரைப்புதூர் கிராம மக்கள் திடீரென 200க்கும் மேற்பட்டோர் சின்னக்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் அரசு பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் குட்டையில் கழிவு நீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...