பல்லடம் அருகே குட்டையில் கழிவுநீர் கலப்பதற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம்!

பல்லடம் அருகே கரைப்புதூர் கிராமத்தில் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கழிவுநீரை கரைப்புதூர் கிராமத்தில் உள்ள குட்டையில் திறந்து விடுவதை கண்டித்து கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் பழமை வாய்ந்த ஓடை மற்றும் குட்டை அமைந்துள்ளது.

ஆறு போன்று அகலம் கொண்ட இந்த ஓடையில், இரண்டு தடுப்பணைகளும் ஒரு அணைக்கட்டும் உள்ளது. மழைக்காலங்களில் இங்கு மழை நீர் தேக்கி வைக்கப்படுவதால் இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு நீராதாரமாகவும் இந்த ஓடை அமைந்துள்ளது.



ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ஓடையால் பயன்பெற்று வரும் நிலையில், இந்த ஓடையில் ஏற்கனவே குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்பட்டு நீர்வழிப் பாதை முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன.



இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து, அப்பகுதி மக்களின் நீராதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அருகிலுள்ள ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கழிவுநீரை இந்த ஓடையில் கலப்பதாக கூறி கரைப்புதூர் கிராம மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், கழிவு நீர் ஓடையில் கலப்பதை தடுப்பதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து, கரைப்புதூர் கிராம மக்கள் திடீரென 200க்கும் மேற்பட்டோர் சின்னக்கரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்டெய்னர் லாரிகள் அரசு பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தங்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் குட்டையில் கழிவு நீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வைத்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, ஒரு மணி நேரம் நீடித்த சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Newsletter

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...