பானிபூரியில் உப்பில்லை எனக் கூறி மதுபோதையில் தகராறு - பல்லடத்தில் பேக்கரி மீது பெட்ரோல் குண்டுவீச முயற்சித்த 4 பேர் கைது!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெருந்தொழுவு என்ற இடத்தில் பானிபூரியில் உப்பு இல்லை எனக் கூறி பேக்கரி உரிமையாளரிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட 4 பேர், பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றதால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அருகே கொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். இவர் பெருந்தொழுவு என்ற இடத்தில் பத்து வருடங்களாக பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

நேற்று திருப்பூரை சேர்ந்த அஸ்வின்,பூவலிங்கம், தினேஷ்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சக்தி கணேஷ் ஆகியோர் சதீஷின் பேக்கரிக்கு மது போதையில் வந்துள்ளனர்.

நான்கு பேரும் பானி பூரி ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளனர். பானிபூரியில் உப்பு இல்லை என கூறி பேக்கரி உரிமையாளர் சதீஷிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பானிபூரி தட்டை தூக்கி வீசிவிட்டு தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த நால்வரும், காலி மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி பேக்கரி மீது வீசி உள்ளனர். பெட்ரோல் குண்டு வெடிக்காத நிலையில் அங்கிருந்து நால்வரும் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.



இது தொடர்பாக சதீஷ்குமார் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்களில் திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவன் மீது ஏற்கனவே ஆறு வழக்குகள் உள்ளன. பானிபூரியில் உப்பு இல்லை எனக் கூறி பேக்கரி மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற போதை ஆசாமிகளால் பெருந்தொழுவு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...