மக்களை ஏமாற்றும் ஆட்சியாகவே இந்த ஆட்சி உள்ளது..! - பொள்ளாச்சியில் எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு

பொள்ளாச்சியில் கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்று எஸ்பி வேலுமணி தெரிவித்தார்.



கோவை: கோவை தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் PRK குருசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி,

பொள்ளாச்சி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி வேலுமணி கலந்துகொண்டார். பொதுகூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும்.



திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆகியும் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை. கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டுள்ளனர். மக்களை ஏமாற்றும் ஆட்சியாகவே இந்த ஆட்சி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...